சிவகாசி - Sivakasi

சிவகாசி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது..

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பழைய விருதுநகர் ரோட்டில் இயங்கி வரும் பள்ளியின் அருகேயுள்ள பேருந்து நிறுத்ததில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. மேற்படி சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் போலீஸார் நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் ஆனைக் குட்டம் பகுதியை அசோக்குமார் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Oct 14, 2024, 17:10 IST/அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை

விருதுநகர்: பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி

Oct 14, 2024, 17:10 IST
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. ‌இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ‌ புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து புளியம்பட்டி சாலியர் உறவின் முறை நிர்வாகிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சந்தித்து பேசினார். ‌நெசவுத்தொழில் அதிகம் செய்யும் சாலியர் சமுதாய மக்கள் தங்கள் தொழிலில் உள்ள குறைகளை மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர். அப்போது 1985 இல் இயக்கப்பட்ட கைத்தறி சட்டத்தை மாற்றி அமைக்கவும் விசைத்தறி தொழிலில் உள்ள குறைகளை நீக்கவும் அமைச்சரிடம் கோரிக்கை‌ விடுத்தனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்தான் மக்களுக்கு தேவையில்லாத 1500 சட்டங்கள் விலக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு மெகா டெக்ஸ்டைல் பார்க்கில் ஒன்று அருப்புக்கோட்டையில் அமைய உள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களின் குறைவினை போக்க ஜவுளித்துறை அமைச்சரிடம் பேசி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.