சிவகாசி - Sivakasi

சிவகாசி: 50% வீதம் போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

சிவகாசி: 50% வீதம் போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் ஆகிய பகுதிகளில் 1024 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் நேரடியாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இத்தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பங்குனி பொங்கல் பண்டிகையை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. 6 மாதத்தில் தொழிலாளர்கள் பெறுகிற சம்பளத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு 22 சதவிகிதம் முதல் 27 சதவிகிதம் வரையிலும், பீஸ்ரேட் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டாசு தொழில் இதர தொழில்களை விட இலாபம் அதிகமாக கிடைக்கிற தொழிலாகும். எனவே, பட்டாசு தொழிலாளர்களுக்கு 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாத போனஸ் 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்குவதற்கு பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி சங்கம் சார்பாக நேற்று(செப்.28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்