சிவகாசி: திமுக ஆட்சியில் அரசி இல்லை-முன்னாள் அதிமுக அமைச்சர்.

80பார்த்தது
திமுக ஆட்சியில் அரசி இல்லை என, சிவகாசி நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்
கே. டி. இராஜேந்திரபாலாஜி குற்றசாட்டு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: 7. 5 சதவீதம் இட ஒதுக்கிட்டை கொண்டு வந்தவர் எடப்பாடியார் என்னும்,
2026-ல் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கோட்டைக்கு போகிறார். ஸ்டாலின் வீட்டுக்கு போகிறார் என்றார், மேலும் திமுக மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு மட்டும் தான் விடிகிறது, மக்கள் விடிய வில்லை என்று குற்றம் சாட்டினார். இன்றைய தினம் பட்டாசு தொழில் பட்டைச்சாராயம் காய்ச்சுவது போல பயந்து பயந்து நடக்கிறது. சரவெடி தயாரிக்க கூடாது. பேரியம் நைட்ரேட் உபயோகிக்க கூடாது என்று சொல்வது பருப்பு இல்லாத சாம்பார் போன்றது. இன்றைய ஆட்சியாளர்கள் பட்டாசு தொழிலை பாதுகாக்க தவறிவிட்டனர். என்றார்.
தமிழகத்தில் யாரும் சுபிட்சமாக சுகமாக வாழ வில்லை, நாம் அனைவரும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சூளுரைத்து சபதம் ஏற்போம் என்றார். கூட்டத்திற்கு சிவகாசி ஒன்றியத்தை அதிமுக கட்சியை சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி