சிவகாசி: லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது...

68பார்த்தது
சிவகாசி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே திருத்தங்கல் S. N. புரம் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் பாண்டியராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்து கொண்டு இருந்த ராஜேந்திரன், மாரீஸ்வரன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் மறைத்து வைத்திருந்த பிற மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ 2730/-ஐ பறிமுதல் செய்து இருவருர் மீது திருத்தங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி