வேலூர்: வேன் மோதி தொழிலாளி பலி
வாலாஜாபேட்டை காமாட்சி நகரில் வசித்து வந்தவர் கேசவன் (வயது 50). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருந்து வாங்குவதற்காக வாலாஜா தபால் அலுவலகம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சோளிங்கரிலிருந்து வாலாஜா நோக்கி வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கேசவனுக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.