சோழிங்கர் - Sozhingar

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா!

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே மேல்வெங்கடாபுரம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் சோளிங்கர் அன்னை புஷ்பாவதி கல்வி அறக்கட்டளை தொடக்க விழா, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாபு என்ற ஜெகதீசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் நிதி உதவி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகள் 10 பேருக்கு ரூ. 1, 000 வீதம் வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் கல்லூரி படிக்கும் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1, 000 வழங்கப்படுவதாக தெரிவித்தனர். ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்பு, அன்னதானம் வழங்கினார்கள்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా