ராணிப்பேட்டை மாவட்டத்தில் 473. 2 மில்லி மீட்டர் மழை பதிவு!

53பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதில் அதிகபட்சமாக கலவையில் 75. 6 மில்லி மீட்டர், ஆற்காட்டில் 70. 2 மில்லி மீட்டர், ராணிப்பேட்டையில் 42. 4 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதே போன்று அனைத்து தாலுகாவிலும் பரவலான மழை பெய்தது. எனவே, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி வரை 473. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி