பிரதம பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயனடையலாம்!

53பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் 2024-2025-ம் ஆண்டுக்கான குருவை நெல் பயிர் காப்பீடு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, போன்ற ஆவணங்களையும் 1 ஏக்கர் நெல் பயிர் காப்பீடு செய்ய ரூ. 690-ம், 1 ஹெக்டர் காப்பீடு செய்ய ரூ. 1704-ம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மழை காலம் என்பதால் நெற்பயிர்கள் மழை வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டாலோ இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டாலோ நெற்பயிருக்கு உரிய இழப்பீடு இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் இழப்பீட்டு தொகை பெற முடியும்.

எனவே விருப்பமுள்ள விவசாயிகள் பதிவு செய்து பயனடையலாம். பொது சேவை மையம், கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள் இணையம் மூலம் விவசாயிகள் பதிவு செய்து பயனடையலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி