சோழிங்கர் - Sozhingar

பனப்பாக்கம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை!

பனப்பாக்கம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை!

பனப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சொர்ணவாரி பருவ நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகிவந்தனர். இந்த நிலையில் தற்போது ஜாகீர்தண்டலம், வேளியநல்லூர், பொய்கைநல்லூர், தென் மாம் பாக்கம், மேலபுலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்க பனப்பாக்கத்தில் ஏற்கனவே இயங்கி வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా