சோளிங்கர்: கரும்பு தோட்டத்தில் மூதாட்டி உடல் கண்டெடுப்பு!

62பார்த்தது
சோளிங்கர்: கரும்பு தோட்டத்தில் மூதாட்டி உடல் கண்டெடுப்பு!
சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் கிராமத்தில் ஏரிக்கரை செல்லும் அருகில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் நேற்று (அக் 1) 70 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சோளிங்கர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி