நள்ளிரவில் வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது

55பார்த்தது
நள்ளிரவில் வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் நேற்று (அக்.8) நள்ளிரவில் சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து, 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போராட்ட திடலில் இருந்த பந்தல்களும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோர் இன்று (அக்.9) ஆதரவு தெரிவிக்க வருகை தரவிருந்த நிலையில் போலீசார் இவ்வாறு செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி