அரக்கோணம் காந்தி நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (29) இவர் அரக்கோணம் எஸ் ஆர் கேட்டில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். நேற்று(அக்.2) நள்ளிரவு ராமதாஸ் நகர் அருகில் பைக்கில் வரும்போது வேகத்தடை மீது ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று(அக்.3) ரஞ்சித் குமார் இறந்தார். டவுன் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.