சொத்து வரி உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்ப பெற வேண்டும் என்று ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் முன்பாக வருகின்ற 8ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அரக்கோணம் எம்எல்ஏ சு. ரவி அழைப்பு விடுத்துள்ளார்.