கோவில்பட்டி - Kovilpatti

பள்ளி மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு

பள்ளி மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு

கோவில்பட்டியில் பள்ளி மாணவனை தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி மேரி, இவர்களது மகன் பார்த்தீஸ், இவர் கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி இரவில் உடற்கல்வி ஆசிரியர், பார்த்தீஸை தாக்கியதாகவும், இதில் காயம் அடைந்த அவரை விடுதி காப்பாளர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் தாயார் மேரி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷிடம் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் புகார் மனு கொடுத்தனர். இந்த புகார் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా