குஷ்புவை முதலில் அதை பார்க்க சொல்லுங்கள்: கனிமொழி எம்பி

71பார்த்தது
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசும்போது
மருத்துவ மாணவி கொலை தொடர்பாக நான் சமூக வலைதளத்தில் கண்டனம் பதிவிட்டுள்ளேன். நடிகை குஷ்புவை முதலில் அதை பார்க்க சொல்லுங்கள். பிறகு பேச சொல்லுங்கள் -

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் குறித்து நிச்சயமாக பேசுவவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்

மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து நான் சமூக வலைதளத்தில் கண்டனம் பதிவிட்டுள்ளேன். நடிகை குஷ்புவை முதலில் அதை பார்க்க சொல்லுங்கள். பிறகு பேச சொல்லுங்கள்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்களை விடுவிப்பதில் சட்ட சிக்கல் இருப்பதால் அவர்களை விடுவிப்பது கடினமாக இருக்கிறது. தொடர்ந்து முதல்வர் விடுவிக்க வலியுறுத்தி வருகிறார். நாங்களும் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் அவர்களை விடுவிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

படகுகளை விடுவிப்பதில்,
இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு தேசியமயமாக்கப்பட்டுள்ளது இதனை மாற்றுவதற்கு ஏதாவது வழிவகை செய்தால் தான் படகுகளை எளிதாக விடுவிக்க முடியும் என அவர் தெரிவித்தார் பேட்டியின் போது அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, நகரச் செயலாளர் ஆனந்த சேகரன் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி