புத்தகம் வாங்கிட உண்டியல் செய்து சேமிப்பு: மாணவர்கள்

74பார்த்தது
புத்தகம் வாங்கிட உண்டியல் செய்து சேமிப்பு: மாணவர்கள்
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்கிட உண்டியல் தயார் செய்து சேமிப்பு பழக்கத்தை தொடங்கி அனைவரையும் கவர்ந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் வருகின்ற அக்டோபர் மாதம் 3. 10. 24 முதல் 13. 10. 24 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறக்கூடிய புத்தகத் திருவிழாவில் பள்ளி குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தையும் தன்னுடைய சேமிப்பிலிருந்து புத்தகங்களை வாங்குவதற்கான தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக உண்டியல் செய்யும் பணிமனை ஏற்கனவே நடைபெற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு உண்டியல் மாடல்கள் தயாரிக்கப்பட்டது.

மேலும் குழந்தைகளும் சொந்தமாக உண்டியலை தயாரித்தனர். தற்பொழுது அவர்கள் சேமிப்பை தொடங்கி உள்ளார்கள். இதனை முன்னிட்டு பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவச் செல்வங்களைப் பாராட்டி சேமிப்பின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படக்கூடிய பல்வேறு நன்மைகளையும், பயன்பாடுகளையும் தெளிவுற எடுத்துரைத்தனர். இதனை பெற்றோர்கள் பார்த்து பாராட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி