ஒண்டிவீரன் நினைவு தினம்: அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை!

84பார்த்தது
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுதினத்தை‌ முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரின் திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கலைஞர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவமனை அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், வட்ட செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா ராஜேஷ், பாலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு அந்தோணி கண்ணன், ரவி, மாமன்ற உறுப்பினர்கள் ஜெயா ஜாக்குலின் செல்வகுமார், மெடிண்டா டேனியல், ஜெயசீலி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, அருணா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி