மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம்: அமைச்சர், மேயர், பங்கேற்பு

65பார்த்தது
பாராளுமன்ற தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்;

தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.



இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி என தொடர்ச்சி பெற்று வரும் தமிழக முகம் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டும் நன்றி தெரிவித்தும் பாராளுமன்றத் தேர்தலில் அனைவரும் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி எனவும் மேலும் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ரயில் சேவையை கொண்டு வருவதற்கு பாடுபட்ட பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கருணாநிதி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி