பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி

58பார்த்தது
விருதுநகர் குகன்பாறையில் லட்சுமி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று (செப்.19) ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 20 வயதான இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஒரு அறை முழுவதும் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். லட்சுமி பட்டாசு ஆலையில் 50 பேர் வரை வேலை பார்க்கின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி