வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

71பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பை யூரனி, திட்டன்குளம், வாகைத்தாவு ஆகிய பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த நேதாஜி விவேகானந்தர் சேவா சங்கம் சார்பில் இலுப்பையூர்ணி திட்டங்களும் யத்தார் அருகே உள்ள வாகை தாவோ ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாங்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் இதுவரை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை


தங்களுக்கு வீட்டு வாடகை கொடுத்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால் கோவில்பட்டி லிங்கம்பட்டி அருகே தங்களுக்கு தமிழக அரசு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி