சேலம் நகரம் - Salem City

உலக தமிழ் சங்கம் சார்பில் சேலம் நூலகருக்கு கருணாநிதி விருது

உலக தமிழ் சங்கம் சார்பில் சேலம் நூலகருக்கு கருணாநிதி விருது

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி உலக தமிழ் சங்கம், வி. ஜி. பி. குழுமம் மற்றும் கவிதை உறவு இலக்கிய அமைப்பு சார்பில் தமிழக அளவில் 100 கவிஞர்களுக்கு கலைஞர் கருணாநிதி விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. கவிஞர் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். வி. ஜி. பி. சந்தோசம் தலைமை தாங்கினார். தொழில் அதிபர் ஜெயராஜமூர்த்தி, கவிதை பித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தர்மபுரி மாவட்டம் சாமாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவரும், சேலம் திருமால் மாநகர கிளை நூலகத்தில் பணிபுரியும் நூலகருமான தென்றல் முருகன் உள்பட 100 கவிஞர்களுக்கு கருணாநிதி விருதை வழங்கினார். விருது பெற்ற கவிஞர்களுக்கு விழாவில் பங்கேற்றவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా