சேலம் நகரம் - Salem City

சேலத்தில் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை

சேலத்தில் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை

சேலம் அம்மாபேட்டை முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48), ஜவுளி வியாபாரி. அவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் சண்முகம் அவ்வப்போது மனவேதனையில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது அறைக்கு தூங்க சென்றார். ஆனால் நேற்று காலை சண்முகம் நீண்ட நேரமாகியும் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு சண்முகம் தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் அஜித்குமார் (28). இவர் ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். அஜித்குமார் தெரிந்த சில நபர்களிடம் கடன் வாங்கி உள்ளார். பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளார். இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக சரண்யா கணவருடன் கோபித்துக்கொண்டு குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனவேதனையில் இருந்த அஜித்குமார் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా