சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 21). இவர் கடந்த மாதம் 31-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை கத்தியை காண்பித்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 2,200 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு சென்றார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர் மீது கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் மேலும் பல திருட்டு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சேலம் மத்திய சிறையில் உள்ள ஜீவானந்தத்திடம் போலீசார் வழங்கினர்.