புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 பேர் மாயம்!
புதுக்கோட்டை |

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 பேர் மாயம்!

அறந்தாங்கியை அருகே அமராவதி நகரை சேர்ந்தவர் சினேகா பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தனியார் பேக்கரியில் வேலை பார்த்து வந்தார் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பெயரில் அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குளத்தூர் அண்டக்குளத்தை சேர்ந்த காயத்ரி இவரது இரண்டு வயது மகனுடன் கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உடையாளிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். திருமயம் அருகே 17 வயது இளம்பெண் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவருடைய தந்தை சுப்பையா கொடுத்த புகாரின் பெயரில் நமணசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். மூக்கம்பட்டியை சேர்ந்த நந்தினி அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை இது குறித்து அவரது தந்தை ராஜாங்கம் கொடுத்த புகாரின் பெயரில் செம்பட்ட விடுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு. இலுப்பூர் பொத்தையன்பட்டி அருகே 17 வயது இளம்பெண் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை சேகர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று (செப்.11) மட்டும் ஐந்து பெண்கள் ஒரு குழந்தை என 6 பேர் ஒரே காரணத்திற்காக மாயமாகியுள்ளனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு