வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலி

83பார்த்தது
பேரழிவை ஏற்படுத்திய யாகி புயல் பாதிப்பால் வியட்நாம் தத்தளித்து வருகிறது. பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 125க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். தலைநகர் ஹனோய் நகரில், சிவப்பு ஆற்றில் இருந்து வெள்ளம் ஓரளவு குறைந்துள்ளது, ஆனால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. புயல் வலுவிழந்தாலும், கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளில் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி