மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு திடீர் உடல்நலக்குறைவு

76பார்த்தது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான பார்வதி என்ற 28 வயது பெண் யானை கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக யானையின் இடது கண்ணில் புரை ஏற்பட்டதால் கண்ணில் வலி ஏற்பட்டு நீர்வழிந்து கொண்டே இருந்தது. அதற்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதனிடையே யானைக்கு திடீரென வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. யானை விரைவில் குணமடைய பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி