கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரையோரம் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் ஆராட்டு துறை வாசலில் கண்களை துணியால் கட்டிக் கொண்டு, இரண்டு கைகளும் இல்லாத நபர் ஒருவர் பிச்சை எடுக்கிறார். இந்த நிலையில் சமூகவலைளங்களில் பரவும் வீடியோ மூலம் மாற்றுத்திறனாளி போல அவர் நடித்து மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அதாவது அவருக்கு இரண்டு கைகளும் இருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதை சட்டைக்குள் மறைத்துள்ளார்.