திருப்பரங்குன்றம் - Thiruparankundram

திருநகரில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

திருநகரில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை அருகே திருநகரில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மதுரை அருகே திருநகர் 6-வது பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (43). இவரது மனைவி ரேணுகா ஆகிய இருவரும் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் மன வளர்ச்சி குன்றிய மகள் ஒருவர் உள்ளார். அவருடைய மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஆசிரியர் சுரேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా