
திருமங்கலம்: மின்சாரம் தாக்கி பலியான பசு
மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்த சோனை என்பவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று (மார்ச் 12) பகல் நேரத்தில் இவருக்கு சொந்தமான பசுமாடு, பாண்டியன் நகர் சுடுகாடு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மின்சார கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது. அந்த மின்கம்பியை மிதித்த மாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. பசுமாடு உயிரிழந்ததை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கம்பி இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.