திருமங்கலம் - Thirumangalam

சுங்கச்சாவடியில் போராட்டம்: முன்னாள் அமைச்சர் கைது

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் இன்று முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கிடையாது எனவும், வழக்கமாக நடைமுறையில் உள்ள வாகன கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் கட்டண விலக்கு அளித்து உள்ளூர் வாகனம் ஓட்டிகள் 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் 2 நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் MLA க்கள் மகேந்திரன், SS-சரவணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் சுங்கச்சாவடி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித சமரசமும் ஏற்கப்படாத நிலையில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆன ஆர். பி. உதயகுமார் குண்டு கட்டாக காவல்துறையினர் தூக்கி பகது கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்ட ஆர் பி உதயகுமாரை கீழே இறக்கி விட வேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக பேருந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా