
திருட்டு கும்பலெல்லாம் ஒதுங்கி பதுங்கு.. களமிறங்கிய AI போலீஸ்..
தாய்லாந்து நாட்டின் நாகோன் காவல்துறையினர் சார்பில் AI கேமிரா பொருத்தப்பட்ட உயர் ரக ரோபோட் காவல்துறையில் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளது. ஏஐ போலீஸ் சைபோர்க் 1.0 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ரோபோ மனிதர்களின் செயல்பாடுகளை கூட்டமான இடத்தில் துல்லியமாக கண்டறியும். இதனால் திருட்டு செயல்கள், சட்டவிரோத குடியேற்ற நபர்களின் அடையாளங்கள் உடனடியாக உறுதி செய்யப்படும். தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் பறக்கும் டிரோன் செயல்பாடுகளையும் AI போலீஸ் கட்டுப்படுத்தும்.