
மதுரை: இலவச கண் சிகிச்சை முகாமில் பயன் பெற்ற மக்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் மதுரை அண்ணாநகர் தி ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர் விசாலாட்சி, ஆலோசகர்களான பிரின்ஸ் இம்மானுவேல், மோகனா, தினகரன் ஆகியோர் கண்பார்வை குறைபாடுகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, கண்புரை, கண்சதை வளர்ச்சி, கண்ணில் நீர் அழுத்தம், ஒற்றைத் தலைவலி உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். இதில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.