வேப்பனஹள்ளி - Veppanahalli

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டூவீலர்: ஒருவர் பலி

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டூவீலர்: ஒருவர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தனியார் நிறுவன ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார்கம்பெனி அருகில் கடந்த 8-ஆம் தேதி அன்று இரவு சென்றபோது எதிர்பாராதவிதமாக டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.16) இறந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி