
ஓசூர்: சேதமடைந்த வீட்டிற்கு பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி வடக்கு ஒன்றியம் காமன்தொட்டி ஊராட்சி அட்டகுறுக்கி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் முனிசந்திரப்பா என்பவரின் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக வீடும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் ஏற்பாட்டில் அவரது குடும்பத்தினருக்கு நேற்று ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் ஆறுதல் கூறி 6 மாதத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.