ஓசூர் அருகே வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்

84பார்த்தது
ஓசூர் அருகே வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, ஜிஆர்பி நிறுவனம், எம்.எஸ். தோனி குளோபல் பள்ளி சார்பாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 1 கோடியே 40 இலட்சம் மதிப்பில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நேற்று(ஆக.29) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு, எம்.பி. கோபிநாத், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி