பாகலூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை.

82பார்த்தது
பாகலூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே சத்தி யமங்கலம் கேட் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ராஜம்மா (52) இவர்களின் மகன் உதய் (28) இவர் கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி அன்று கொலை செய்யப்பட்டார். அன்று முதல் ராஜம்மா மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி பெருமாள் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ராஜம்மா விஷம் குடித்து மயங்கி இருந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சம்பவம் அன்று ராஜம்மா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி