ஓசூர் - Hosur

சூளகிரி: லாரி மீது டூவீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

சூளகிரி: லாரி மீது டூவீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு

சிவகாசி பகுதியை சேர்ந்த மகாராஜ் மகன் ராகுல் (22). இவருடைய நண்பர் வெற்றிவேல் (27). இவர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர். இருவரும் உடல் நலமின்றி கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களது நண்பரை பார்ப்பதற்காக நேற்று (அக்-2ம் தேதி) டூவீலரில் கிருஷ்ணகிரி நோக்கி வந்தபோது அந்த வழியாக வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் ராகுல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வெற்றிவேல் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி