ஓசூர் - Hosur

மத்திகிரி: விஷம் குடித்து ஐடி ஊழியர் தற்கொலை

மத்திகிரி: விஷம் குடித்து ஐடி ஊழியர் தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூர் நவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (29). ஐடி நிறுவன ஊழியரான இவர் ஓசூர் மத்திகிரி பகுதியில் வசித்து வரும் தனது உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி அன்று சதீஷ்குமார் மத்திகிரிக்கு வந்து அங்குள்ள பெண்ணின் சகோதரரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் தனது தங்கையை திருமணம் செய்து கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதில், மனமுடைந்த சதீஷ்குமார் விஷம் குடித்து, மயங்கிய நிலையில் அவரை மீட்டு மத்திகிரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சதீஷ்குமார் நேற்று முன்தினம் (செப்-11) உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி