கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், கோவிந்த அக்ரஹாரம் சர்க்கிள் பகுதியில் சம்வம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த நேரம் அந்த வழியாக வந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பால தோட்டனபள்ளி அடுத்த திம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த பூஞ்சோலையன் (40) தெரியவந்தது. இதையெடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.