அரூர் - Harur

மூதாட்டி வீட்டில் 1 லட்சம் திருடிய வாலிபர் கைது

மூதாட்டி வீட்டில் 1 லட்சம் திருடிய வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மத்தன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் காவேரியம்மாள் (65). இவருக்கு வங்கிக் கடன் பெற்று தருவதாக கூறி, அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் செல்போன் மூலம் தகவல் கூறியதாக தெரிகிறது. பின்னர் சம்பந்தப்பட்ட நபர், மூதாட்டி காவேரியம்மாளை செல்போன் மூலம் முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு நேரில் வர கூறி உள்ளார். அதை நம்பிய மூதாட்டியும் அவர் கூறிய கிராமத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் முதாட்டி வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்த தங்கவேல், மூதாட்டி காவேரியம்மாள் வீட்டுக்கு சென்று ரூ. 1 லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டி காவேரியம்மாள் நேற்று(செப்.19) மாலை அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டிக்கு வங்கி கடன் பெற்று தருவதாக கூறி நூதன முறையில் அவரது வீட்டில் ரூ. 1 லட்சத்தை திருடிய விவகாரத்தில், தங்கவேலுவை இன்று செப்டம்பர் 20 காலை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 1 லட்சத்தை காவலர்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

வீடியோஸ்


தர்மபுரி