முன்னாள் அமைச்சர் தலைமையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

544பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் கொங்கு திருமண மண்டபத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 13) திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் திமுக அதிக அளவில் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

அதற்கு தற்போது இருந்தே களப்பணி ஆற்ற வேண்டும் நமக்கு கிடைத்திருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பை அனைத்து நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி