வாரச்சந்தையில் 55 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

66பார்த்தது
தர்மபுரி மாவட்டம்
நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தை மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற சந்தைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நேற்று செப்டம்பர் 10 காலை கூடிய சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க குவிந்தனர். ஆடுகள் ரகம் மற்றும் அளவை பொறுத்து 2, 800 ரூபாய்க்கு துவங்கி 22, 000 ரூபாய் வரை விற்பனையானது நேற்று ஓரே நாளில் 55 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி