ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட அரசு அலுவலர்கள்

60பார்த்தது
ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட அரசு அலுவலர்கள்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செப்டம்பர் 16, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி இ. ஆ. ப. , அவர்கள் "சமூக நீதி நாள்" என்ற உறுதிமொழியினை வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர். இந்த உறுதிமொழி கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. செம்மலை, மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி. செர்லின் ஏஞ்சலா, தாட்கோ உதவி மேலாளர் திருமதி. த. ரேவதி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் திரு. முருகதாசன், இளநிலைப் பொறியாளர் திரு. சிலம்பரசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி