வார சந்தையில் 22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

55பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை சந்தை நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய கடன் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் ஒரு ஆடுகள் 5200 முதல் 10, 000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் நேற்று செப்டம்பர் 13 நடைபெற்ற சந்தையில் 22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி