
தர்மபுரி: அண்ணா விரைவு சைக்கிள் போட்டிகள் அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இன்று சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி. வருகிற ஜனவரி 4- தேதி காலை 7 மணிக்கு தர்மபுரி - பென்னாகரம் மெயின் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளியில் போட்டிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டிகள் 1. 1. 2012-க்கு பின்னர் பிறந்த 13 வயதிற் குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி. மீ தூரமும், மாணவிகளுக்கு 10 கி. மீ தூரமும் நடக்கிறது. இதேபோல் 1. 1. 2010-க்கு பின்னர் பிறந்த 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கிமீ தூரமும், மாணவிகளுக்கு 15கி. மீ. தூரமும், 1. 1. 2008-க்கு பின் பிறந்த மாணவர்களுக்கு 20 கி. மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி. மீ. தூரமும் இந்த விரைவு சைக்கிள் போட்டிகள் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான இந்த விரைவு சைக்கிள் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முறையே தலா ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் மற்றும் முதல் 10 இடங்களை பெறும் வீரர், வீராங்க னைகளுக்கு தலா ரூ. 250 வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.