![](https://media.getlokalapp.com/cache/95/bd/95bdb82922022f0204f4f91aec5cba17.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
டூவீலரில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
கோட்டப்பட்டி தரகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி விக்னேஷ். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். நேற்று கடைக்கு சென்று விட்டு விக்னேஷ், டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகேயுள்ள தோட்டம் பகுதியில் வந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதனால் பிரேக் பிடித்த போது, நிலை தடுமாறி விக்னேஷ் சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவம்னையில் சேர்த்தனர். மேல் சிகிச் சைக்காக தர்மபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று விக்னேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.