பேருந்து நிலையத்தில் தீவன லாரி கவிழ்ந்து விபத்து

66பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் பேருந்து நிலையம் பகுதியில் இன்று விடியற்காலை சேலம் செல்வதற்காக தீவன மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் இருந்த நான்கு மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலை ஓரத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அரூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி