அரூர் பேருந்து நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் கள ஆய்வு

65பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தீவன லாரி ஒன்று கட்டுபாட்டை இழந்து அரூர் பேருந்து நிலையத்தில் விபத்திற்குள்ளானது. இதனை அடுத்து அரூர் பேருந்து நிலையத்தில் விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கையாக வேகத்தடை அமைத்தல் தொடர்பாக அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வே. சம்பத்குமார் , அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. வில்சன்ராஜசேகர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் அரூர் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி