

பேரூர்: 300 சிவலிங்கங்களை வைத்து சிவ பூஜை
கோவை மாவட்டம் பேரூர் ஆதீன 24-ஆம் குரு மகா சன்னிதானங்களாக திகழ்ந்த, தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நேற்று (ஜன.3) 300 சிவலிங்க திருமேனிகளுக்கு கோடி அர்ச்சனை வழிபாடு தவத்திரு சாந்தலிங்கனார் திருமடத்தில் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் தனித்தனியான சிவலிங்க திருமேனி வழங்கப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் கோடி அர்ச்சனை வழிபாடும் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.