கிணத்துக்கடவு - Kinathukadavu

கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 2 பேர் மீது குண்டாஸ்

கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 2 பேர் மீது குண்டாஸ்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் 60 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பசீர் மகன் ரஷீத்(30), மற்றும் உமர் மகன் கலீல் ரகுமான் (44) ஆகியோர்களை பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான ரஷீத்(30) மற்றும் கலீல் ரகுமான் (44) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా