கிணத்துக்கடவு - Kinathukadavu

நிதி நிறுவன மோசடி புகார் அளிக்க அழைப்பு

நிதி நிறுவன மோசடி புகார் அளிக்க அழைப்பு

கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகரில் டிரிம் மார்க்கெட்டிங் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பதாக தருவதாக கூறியிருந்தது. அவ்வாறு அந்த நிறுவனம் இதுவரை, 2000க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து ரூ. பல கோடி பெற்று திருப்பி தராமல் மோசடி செய்தது. இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணையில் உள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து, பாதிக்கப்பட்ட நபர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా