கோவை: திவிக தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்கள் சந்திப்பு

51பார்த்தது
கோவை சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தமிழீழமும் திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திவிக தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், ஈழ விடுதலைக்கான போராட்டம் என்பது, 1961-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஐநா மன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். தனிக்குழு ஏற்படுத்தி அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என எழுதினார். 

அது அறவழி போராட்டம் நடந்த காலகட்டம். அறவழி போராட்டத்தில் எந்த பையனும் இல்லாமல் போனதால்தான் ஆயுதப் போராட்டமாக மாறியது. ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னர் போராளிகள் இந்தியாவிற்கு பயிற்சிகள் மேற்கொள்ள வந்தார்கள். பல குழுக்களை அரசே அழைத்தது, அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் ஆயுதப் பயிற்சிகள் நடக்கத் தொடங்கியது. அனைத்து பயிற்சி வகுப்புகளும் திராவிட இயக்க தோழர்களால் தான் நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்து இந்திய அமைதிப்படை போய் சிக்கல்கள் ஏற்பட்ட போதும், அதற்கு வந்த போது சிகிச்சை அளித்தவர்கள், ஆயுதங்கள் அனுப்பியவர்கள் அனைவருமே திராவிட இயக்கங்களை சார்ந்தவர்கள் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி