கோவை: அமித்ஷாவிற்கு கருப்புக்கொடி காட்டப்படும்!

75பார்த்தது
சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வரவு, செலவு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் கம்யூனிஸ்டுகள், தலித் அமைப்பினர் மற்றும் அம்பேத்கரிய அமைப்பினர் உள்ளிட்ட 20 - க்கும் மேற்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் வகையிலும், இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையிலும் கோவை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு கருப்புக்கொடி காட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நேற்று பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் 20 க்கும் மேற்பட்ட அமைப்பினர் பிப்ரவரி 27ஆம் தேதி கோவை கோவை விமான நிலையத்தில் இந்த கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு உரிய எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையிலும் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி